ஆயுள்வேதம் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

304

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆயுள்வேதம் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்தை திருத்துவதற்கு முன்வைக்கப்பட்ட ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய இந்த சட்டமூலம் 2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமாக நேற்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here