தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக திறக்கப்படும் விதம்

494

மண்சரிவு காரணமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதி இன்று மாலை 6 மணிக்கு திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிய 02 இடது பாதைகள் மாத்திரம் இருபுறமும் பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வாகனப் போக்குவரத்துக்காக வலதுபுறம் உள்ள 02 பாதைகள் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here