தெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் விரைவில் திறக்கப்படும்

373

இமதுவ மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டுள்ள தெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் மண்சரிவு பகுதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஸ்தாபிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்துரையாடி அதன் புனரமைப்பு பணிகளை விரைவில் முடிப்பதாக சபை பணிப்பாளர் வீரகோன் தெரிவித்தார்.

நேற்று மாலை 6 மணியளவில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிய இரண்டு இடது பாதைகள் மாத்திரம் இரு திசைகளிலும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here