மண்சரிவு காரணமாக கொழும்பு பதுளை பிரதான வீதி தடைப்பட்டுள்ளது.
ஹபுத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மறு அறிவித்தல் வரும் வரை குறித்த வீதியினை பயன்படுத்த வேண்டாம் எனவும், அவ்விடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.