அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கட்சியில் இருந்து தம்மை நீக்கி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த மனு இன்று(23) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.