புறக்கோட்டை தீ விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில்

646

கொழும்பு – புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள ஆடை விற்பனை தொகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 23 பேர் கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட குறிப்பிட்டார்.

இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அனைவருக்கும் நச்சுப் புகையை சுவாசித்ததால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயாளர்கள் அனைவரும் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வைத்தியர் தெரிவித்தார்.

தீயினால் வர்த்தகத் தொகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் 11 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here