சீதாவக்க ஒடிசி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்

153

சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக்க ஒடிசி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இதன்படி சீதாவக்கை ஒடிசி சுற்றுலா ரயில் சேவை விடுமுறை நாட்களில் வழமை போன்று இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சீதாவக்கை ஒடிசி ரயில் இன்று காலை 8.25க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன், மாலை 6.50 அளவில் அவிஸ்ஸாவலை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here