அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமலை பிரதேசத்திலிருந்து 4.64 மீற்றராக அதிகரித்துள்ளநிலையில் 5.50 மீட்டராக அதிகரித்தால் வெள்ளம் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
அதன் பிரகாரம் தற்போது குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு அதன் நீரின் வெப்பநிலை 6.25 மீற்றராக உள்ளது.