எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல் வைப்பு

641

எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு காரணமாக, பிலியந்தலை நகரில் உள்ள சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

சினோபெக் பெற்றோல் நிலையத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

அதன்படி, நுகேகொடை பிராந்திய அலுவலகத்தின் பகுதி முகாமையாளர் டொன் பிரசன்ன டிலிருக் ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று (30) இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டதையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here