இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரிப்பு

357

இலங்கை இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ் வருடம் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தரவுகள் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு 11 மில்லியன் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 110 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இளநீரின் தொகை 14 மில்லியன் எனவும் இதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபா எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here