அத்தனகளு ஓயா, நில்வளா கங்கையை அண்மித்து வெள்ள அபாயம்

224

அத்தனகளு ஓயா மற்றும் நில்வளா கங்கைகளை அண்மித்து வௌ்ளம் ஏற்படும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் விநியோகப் பிரிவு பணிப்பாளர் எஸ் பீ சீ சுகீஷ்வர அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணிக்க கங்கையை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் விநியோகப் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here