குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
விசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த குறித்த இலங்கை பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குவைத்தில் இதுபோன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளதாகவும், அவர்கள் குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகவும் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.