follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஅரிசி மாபியா- கீரி சம்பா தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்து

அரிசி மாபியா- கீரி சம்பா தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்து

Published on

தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவது அரிசி மாபியாக்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளே காரணம் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் போதியளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் உள்ள போதிலும், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் கையிருப்பை மறைத்து வருவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சிறுபோகத்தில் கீரி சம்பா அறுவடை குறைவடைந்திருந்தாலும், அதற்கு முன்னதாக பெரும்போகத்தில் செய்யப்பட்ட அறுவடையில், கீரிசம்பா கையிருப்பு தற்போதைய காலத்திற்கும் போதுமானதாக காணப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு ரகசியமாக விற்கும் மோசடியில் பல வியாபாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...