follow the truth

follow the truth

August, 26, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

Published on

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் காரணமாக பல கடைகளில் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு தொடர்புடைய பல துறைகளில் உள்ள நுகர்வோர், உற்பத்தியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 295 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 275 ரூபாவாகவும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது

பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 350 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

சந்தையில் சீனி தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் மிட்டாய் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...