அவுஸ்திரேலியாவின் சிட்னியின் பொட்டனி துறைமுகத்தில் இஸ்ரேலின் சரக்கு கப்பலின் வருகைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சிட்னியின் பலஸ்தீனத்திற்கான நீதி இயக்கமும் பலஸ்தீனத்திற்கான தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இது இஸ்ரேலிய கப்பல்களின் வருகைக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வேளை கப்பல் அந்த பகுதியில் இல்லை எனவும் அதன் வருகை தாமதமாகியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.