உத்தரகாண்ட் சுரங்க விபத்து – 40 பேரை மீட்கும் பணி தீவிரம்

262

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 35 மீட்டர் நீளத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளதகவும் அதே நேரம் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here