இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூவர் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.