follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு

Published on

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று(14) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இவ்வருட வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தரப்பில் இருந்து நோக்கும் போது இது பாதகமான வரவு செலவுத் திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...