யால சரணாலயத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யால சரணாலயத்தின் 06 ஆம் இலக்க வலயத்தில் நேற்று(15) மாலை 6 மணியளவில் வனவள அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வனவள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செயயப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.