தட்டுப்பாடு இன்றி சீனியை விநியோகிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தலைமையில் இன்று(16) வர்த்தக அமைச்சில் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு சீனி இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்தார்.
நிர்ணய விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.