இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க, எதிர்வரும் 21ஆம் திகதி விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தேர்வுக் குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருந்ததை அடுத்து அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.