புலமைப்பரிசில் பரீட்சை கடினமானது என சிலர் கருத்து வெளியிட்டாலும் பிள்ளைகள் நன்றாக பரீட்சை எழுதியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்குள் புலமைப்பரிசில் பெறுபேறுகளை வெளியிட முடிந்தமை பெரிய சாதனை என்றும் அமைச்சர் கூறினார்.