இலங்கைக்கு கொண்டு வரப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது என்பது நிரூபனமாகியுள்ளதாகவும், தரமற்ற எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் நோக்கிலே தாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் நுகர்வோர் குறித்து சிந்தித்தே தான் இத்தகவலை வெளிப்படுத்தியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எரிபொருளினதும் சகல பரிசோதனை அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், இந்த அறிக்கைகளின் பிரகாரம் எரிபொருள் தரமற்றதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.