அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகளை கண்டித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.