போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நுகேகொடையில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ‘மக்கள் எதிர்ப்பு’ என்ற போராட்டத்தில் கலந்து கொள்ள போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றதால், நுகேகொட, கம்சபாவ பகுதியில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.