காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாள்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து 42வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸாவில் வான் வழி, கடல் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்திவருகிறது.
காஸாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை மூன்றாவது நாளாக இஸ்ரேல் ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் மறைந்துள்ள ஹமாஸ் படையினரை தேடும் பணிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், பிறந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.