சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (23) அனுமதி வழங்கியுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்திலிருந்து 9,90,000 ரூபாவை G.I.B ஐ கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சில கடமைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்தார்.
இதன்படி, அனுமதி வழங்கிய நீதிபதி, அவருக்கு எதிராக ஒதுக்கப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.