உலகிலேயே குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா பகுதி என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 5,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு மேலதிகமாக பேரழிவு தரும் வாழ்க்கை நிலைமைகளிலிருந்து காஸாவின் குழந்தைகள் “அதிக ஆபத்தில்” இருப்பதாக யுனிசெப் அமைப்பின் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.