follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதற்போதைய அரசாங்கமும் பொருத்தப்பாடுகள் இன்றி அமைச்சுக்களை பிரிக்கும் வேலையையே செய்தது

தற்போதைய அரசாங்கமும் பொருத்தப்பாடுகள் இன்றி அமைச்சுக்களை பிரிக்கும் வேலையையே செய்தது

Published on

பொருளாதார ரீதியாக வங்குரோத்தான நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மை,கடன் நிலைத்தன்மை பற்றி பேசுவது போலவே சுற்றாடல் குறித்த நிலைத்தகு தன்மையையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றாலும், தற்போதைய அரசாங்கம் நீதி மற்றும் நிலைத்தகு தன்மை குறித்து பேசுகிறது என்றும், தற்போதைய அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர் 3 தடவைகளில் சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் துறை தொடர்பான 3 அமைச்சர்களை மாற்றியமைத்ததில், நீதி மற்றும் நிலைத்தகு தன்மை குறித்து பேச முடியுமா என்பது சிக்கலாக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்சமயமும், சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் துறை தொடர்பாக 2 அமைச்சுகள் உள்ளன என்றும், இதனால் ஒரே அமைச்சின் கீழ் இந்த 2 அமைச்சுகளும் இல்லாத நிலையில் சுற்றாடல் நீதி மற்றும் நிலைத்தகு தன்மை குறித்து பேச முடியாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்த 2 அமைச்சுக்களையும் இணைத்து ஒரு அமைச்சின் கீழ் செயற்பட வேண்டும் என்பதே தமது கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று கூறினாலும், ஆட்சிக்கு வந்தவுடனேயே பல்வேறு நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டன என்றும், தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் அது மாறும் என நினைத்தாலும், அது அவ்வாறு மாறவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சுற்றாடல், வன ஜீவராசீகள் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான ஒதுக்கீட்டு சட்ட மூலம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று(27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...