இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நாளை (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட இடைக்கால குழு உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.