இரண்டு மதுபான நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை மதுவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
டபிள்யூ. எம். மெண்டிஸ் என்ட் கம்பனி மற்றும் ரந்தெனிகல டிஸ்டில்லரீஸ் ஆகிய நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமார சிங்க தெரிவித்துள்ளார்.
இணக்கப்பாட்டுக்கமைய, வரி நிலுவையை செலுத்தாத காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.