follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகண்டி அபிவிருத்தி திட்டத்திற்கு 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கண்டி அபிவிருத்தி திட்டத்திற்கு 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Published on

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் “கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான விசேட வேலைத் திட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் வசதிகளை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,

வடக்கு, வடகிழக்கு, ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களில் மேலும் சுமார் 7000 மில்லியன்கள் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும், முன்பள்ளி முதல் பாடசாலைகள் வரை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது எமது நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதால் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றாக சுமார் 1000 மில்லியன்களை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார். அந்த நிதியுடன் சேர்த்து உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் 1500 மில்லியன்கள் செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த மாநகர சபைகளுக்கு 50 % நாம் வழங்கவுள்ளோம். அதேபோன்று நகர சபைகளுக்கு 70 % வழங்க எதிர்பார்த்துள்ளோம். முன்னேற்றமடையாத உள்ளூராட்சி மன்றப் பிரதேசங்களுக்கு அவசியமான நிதியை முழுமையாக வழங்கி அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய, விசேடமாக நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ள இடங்கள் போன்ற பிரதேசங்களில் அவசியமான வசதிகளை மேம்படுத்தவும் தற்போது நாம் திட்டமொன்றை வகுத்துள்ளோம். அதேபோன்று, புனிதஸ்தலங்கள் அமைந்துள்ள பிரதேசங்களைத் தரிசிக்க வருகை தருபவர்களுக்கான வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு, குறுகிய காலத்தில் பல்வேறு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் திட்டமிட்டு வருகின்றோம்.

மேலும், வெற்றிடமாக உள்ள சுமார் 2700 கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை பணியில் அமைர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள 8400 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.” என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...