follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமனித உரிமைகள் ஆணைக்குழு ஜனவரி 24 கோபா குழுவிற்கு

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனவரி 24 கோபா குழுவிற்கு

Published on

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பான கலந்துரையாடல் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இடம்பெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பில் அதன் செயற்பாடுகள் மற்றும் வரவுசெலவுத்தித்திட்டத்தின் மூலம் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வாறு செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஆணைக்குழுவிற்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது வரை தீர்வு வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, தற்பொழுது தீர்வு வழங்கப்படாத முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை குழு சுட்டிக்காட்டியது.

மேலும், 2024 ஜனவரி 24 ஆம் திகதி இவ் ஆணைக்குழுவை மீண்டும் கோபா குழு முன்னிலையில் அழைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...