follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமனித உரிமைகள் ஆணைக்குழு ஜனவரி 24 கோபா குழுவிற்கு

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனவரி 24 கோபா குழுவிற்கு

Published on

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பான கலந்துரையாடல் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இடம்பெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பில் அதன் செயற்பாடுகள் மற்றும் வரவுசெலவுத்தித்திட்டத்தின் மூலம் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வாறு செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஆணைக்குழுவிற்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது வரை தீர்வு வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, தற்பொழுது தீர்வு வழங்கப்படாத முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை குழு சுட்டிக்காட்டியது.

மேலும், 2024 ஜனவரி 24 ஆம் திகதி இவ் ஆணைக்குழுவை மீண்டும் கோபா குழு முன்னிலையில் அழைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...