ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் அங்குள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஜெர்மனியில் உள்ள முனீச் விமானநிலையத்தில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால் விமான நிலையம் மூடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பனி பொழிவால் பல்வேறு சாலைகளில் வாகனங்கள் பனி துகள்களால் மூடப்பட்டு கிடக்கின்றன.கிறிஸ்துமஸ் வணிக வளாகங்கள் மூடப்பட்டதுடன், கால்பந்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால், ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.