தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’வை உரிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவைப் பெறுவதற்கு போதிய தரவுகள் இல்லாவிட்டால், அதை பெறுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரக் கட்டா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.