கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மூன்று நாட்களாக இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையால் நோயாளர்கள் பணம் செலுத்தி இரத்த பரிசோதனை அறிக்கைகளை தனியார் பரிசோதனை கூடங்களில் கொண்டு வர வேண்டியுள்ளதுடன் இரத்த பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.