follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1கதிர்காமம் 'கபுவா' வை கைது செய்ய உத்தரவு

கதிர்காமம் ‘கபுவா’ வை கைது செய்ய உத்தரவு

Published on

ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் தலைவர் ‘கபுவா’ மற்றும் விகாரையின் திறைசேரிக்கு பொறுப்பான ‘கபுவா’ ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குழந்தையின் நேர்த்திக்கடனுக்கான பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி ருஹுனு கதிர்காமம் மஹா தேவாலயத்திற்கு வழங்கிய 38 பவுண்கள் எடை கொண்ட தங்க வட்டு காணாமல் போனமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கதிர்காம மகா தேவாலய கபுவா துரந்தர சோமிபால ரத்நாயக்க மற்றும் தேவாலய திறைசேரிக்கு பொறுப்பான கபுவா துரந்தர பிரதானி கபுராலாவின் பேரன் சமன் பிரியந்த அல்லது சுட்டி கபு மஹதயா ஆகியோருக்கு இந்த கைது உத்தரவு கிடைத்துள்ளது.

இந்த தங்க நெக்லஸ் காணாமல் போனமை தொடர்பில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ருஹுணு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் விக்ரமரத்ன குணசேகரவினால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் விசாரணைக்கு அதனை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கையளித்தார்.

இதன்படி, அதன் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவின் கீழ், பிரிவு இலக்கம் 1 நிலைய கட்டளைத் தளபதி இன்ஸ்பெக்டர் டி.ஜே. நிஷாந்த தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்ற B 73047/2021 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளது.

அதன்படி, சட்டமா அதிபரின் பணிப்புரை நேற்று (07) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...