களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்கள் மீள ஆரம்பம்

215

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை (11) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களை மாணவர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று தாக்கிய சம்பவத்தினால் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மூடப்பட்டன.

பின்னர், சம்பந்தப்பட்ட 4 மாணவர்களின் வகுப்புகளை இடைநிறுத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here