follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஎட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக எட்டு மாவட்டங்களில் உள்ள 34 பிராந்திய செயலகங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று(11) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல, பசறை, மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவித்தலும், ஹாலிஅல பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் வல்லாவிட பிரதேச செயலகப் பிரிவுக்கான முதல் நிலை அறிவித்தலும் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுக்கான இரண்டாம் நிலை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் பததும்பர உடதும்பர, உடபாலயத, மெததும்பர மற்றும் கங்கவட கோரலய ஆகிய பிராந்திய செயலகப் பிரிவுகளுக்கான முதல் நிலை அறிவித்தலும், யட்டிநுவர தும்பனை மற்றும் பஸ்பாகே கோரளய ஆகிய பிராந்திய செயலகப் பிரிவுகளுக்கான இரண்டாம் நிலை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ மற்றும் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம ரிதிகம மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, அம்பங்கங்க, கோராலய, லக்கல, பல்லேகம மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, வலப்பனை மற்றும் ஹகுரன்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகேபொல ஓபநாயக்க, அலபத கலவான, குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...