follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை

மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை

Published on

மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மிஹிந்தலை புனிதத் தலத்தின் பாதுகாப்பிற்கு ஸ்ரீலங்கா காவல்துறை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சுமார் முப்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மிஹிந்தலைக்கு பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக இராணுவத்தை ஈடுபடுத்தும் திறன் கொண்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை விகாரைக்கு இராணுவம் அனுப்பப்பட்டிருப்பது பாதுகாப்புக்காக அல்ல, வேறு வேலைகளுக்காகவே எனத் தெரிவித்த பிரமித பண்டார தென்னகோன், மிஹிந்தலையில் இருந்து 252 பாதுகாப்புப் படையினர் அகற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...