follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2தபால் சேவை ஸ்தம்பிதம் - 7 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

தபால் சேவை ஸ்தம்பிதம் – 7 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

Published on

தபால் ஊழியர்கள் முன்னேடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக, மத்திய தபால் நிலையம் உட்பட ஏனைய தபால் நிலையங்களில் சுமார் 7 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய தபால் பரிமாற்றத்தில் மாத்திரம் சுமார் 4 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொருட்கள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சம்பத் லியனகே தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தம் காரணமாக இன்று (11) மத்திய தபால் நிலைய நடவடிக்கைகள் உட்பட அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டதுடன் சில தபால் நிலையங்கள் பூட்டி மூடப்பட்டிருந்தன.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

27000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...