follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP2தபால் சேவை ஸ்தம்பிதம் - 7 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

தபால் சேவை ஸ்தம்பிதம் – 7 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

Published on

தபால் ஊழியர்கள் முன்னேடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக, மத்திய தபால் நிலையம் உட்பட ஏனைய தபால் நிலையங்களில் சுமார் 7 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய தபால் பரிமாற்றத்தில் மாத்திரம் சுமார் 4 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொருட்கள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சம்பத் லியனகே தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தம் காரணமாக இன்று (11) மத்திய தபால் நிலைய நடவடிக்கைகள் உட்பட அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டதுடன் சில தபால் நிலையங்கள் பூட்டி மூடப்பட்டிருந்தன.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

27000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...