இந்திய பாராளுமன்றத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

331

இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும்போது இன்று மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பலத்த பாதுகாப்பிற்குப் பிறகே மக்களவையில் பார்வயைாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு சென்றது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here