கனிமொழி உட்பட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்தம்

201

இந்திய பாராளுமன்ற அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டமைக்காக கனிமொழி உட்பட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டமையை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here