கொழும்பு – பதுளைக்கு நாளை முதல் விசேட ரயில்கள்

274

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு நாளை முதல் இரண்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை (27) மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இரண்டு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இம்மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி காலை 7.45 மணிக்கு இரண்டு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here