இரசாயன உரத்திற்கு பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அது தொடர்பில் சாதகமான முறையில் பதிலளித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
பெரும்போக பயிர்ச்செய்கைக்கு அவசியமான அனைத்து இரசாயன உரங்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த உரத்தொகையை பழைய விலைக்கே விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.