பாடசாலை விடுமுறை நாட்களிலும் முழுமையான மாதாந்த கட்டணத்தை செலுத்துமாறு கண்டி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் அம்மாவட்ட பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்க தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவிதார்.