follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு

Published on

வரலாற்றில் அதிகளவு காய்கறிகளின் விலை நேற்று (03ம் திகதி) பதிவாகியுள்ளது.

தம்புள்ளை மொத்த சந்தையில் பெறப்படும் 60% மரக்கறிகளின் மொத்த விலை கிலோ ஐந்நூறு ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தக சங்கத்தின் புரவலர் சாந்த ஏகநாயக்க தெரிவித்தார்.

கோவா, போஞ்சி, கேரட், தக்காளி, வெண்டைக்காய், முள்ளங்கி, உட்பட சில காய்கறிகளின் மொத்த விலை 300 முதல் 500 ரூபாய் வரை இருந்தது.

கத்தரிக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், பெரிய மிளகாய் உள்ளிட்ட பல காய்கறிகளின் மொத்த விலை 500 ரூபாயை தாண்டியது.

அடுத்த பதினைந்து நாட்களில் ஒரு கிலோ காய்கறிகளின் மொத்த விலை ஆயிரம் ரூபாயை தாண்டும் என மொத்த வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், சில்லறை சந்தையில் காய்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...