பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.