இபோச ஊழியர் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

241

ஏறக்குறைய ஐந்து வருடங்களாக தாமதமாகி வரும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் சம்பளத்தை முறையாக திருத்தியமைக்க உடனடியாக தலையிடுமாறு அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான தொழில் நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனவரி மாதத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச் சீட்டுகளை இரத்துச் செய்யுமாறு அதன் பொது முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு ஜனவரி 3 ஆம் திகதி அறிவித்துள்ளமையினால் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக பாடசாலை பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் நாகஸ்தன்னே அருண தேரர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here